FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Sunday, July 31, 2011

நித்தியானந்தா இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 31, ஜூலை 2011 (14:41 IST)





நித்தியானந்தாவை கைது செய்யக் கோரி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் நித்தியானந்தாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம்,

இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார். நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும்.

இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா. கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தர் தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர் இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்றார்.







http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58664




Saturday, July 30, 2011

Nithyananda (A guru who has nothing to do with enlihttp://www.blogger.com/post-edit.g?blogID=6186658350484112858&postID=7099082702549929019ghtenment and spirituality)




http://www.youtube.com/watch?v=6BwyyJxo4Y8

சீண்டாதீர்கள், அழித்து விடுவோம்’ இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு நித்யானந்தா கொலை மிரட்டல்


திருப்பூர் : கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா மீது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் அளித்தனர்.
சென்னையில் நித்யானந்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்து மக்கள் கட்சியை பற்றி அவதூறாக பேசியதாக கூறி அக்கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களை தடுக்கும் வகையில், நித்யானந்தாவிடமிருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் முருகேஷ்ஜி, எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் நேற்று புகார் மனு கொடுத்தார். மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் அக்கட்சியினர் வழங்கினர். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
போலி சாமியார் நித்யானந்தாவை கண்டித்து வரும் 29ம் தேதி (நாளை) முதல் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதெனஅறிவித்திருந்தோம். இந்நிலையில், கூரியர் மூலம் பார்சல் ஒன்று வந்தது. நித்யானந்தா அருள்பீடம், பெங்களூரு என்ற முகவரியில் இருந்து வந்த அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, ‘பட்டினத்தார் வாழ்வும், வாக்கும்‘ என்ற புத்தகமும், ஜீவன் முக்தி பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் புத்தகமும் இருந்தது.

புத்தகத்தினுள் வைக்கப்பட்டிருந்த சீட்டில் ‘எங்களை சீண்டாதீர்கள், உங்களை அழித்து விடுவோம்‘ என எழுதப்பட்டிருந்தது. இந்த செயல் இந்து கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்தியும், இளம்பெண்களை சீரழித்தும் வரும் போலி சாமியார் நித்யானந்தாவை கண்டித்து வரும் எங்கள் போராட்டத்தை தடுக்க விடுக்கும் கொலைமிரட்டல் ஆகும். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, நித்யானந்தா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியராஜ், ஒன்றிய அமைப்பாளர் ஜீவா, 15 வேலம்பாளையம் நகர செயலாளர் காளீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2212

Wednesday, July 27, 2011



            ட்சி மாற்றத்திற்கு பிறகு வெளியே தலை காட்டத் துவங்கியிருக்கும் நித்தி, "ஜூலை 15-ந் தேதி குருபூர்ணிமா நாளில் பக்தர்களை அந்தரத்தில் மிதக்கவைக்கவிருக்கிறேன்'’ என்று அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக பிடதி ஆசிரமம் ஜெகஜோதியாக மின்னியது. உடலை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்தியின் சாகஸத்தைக் ’கண்டு களிக்க’ உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் ஏராளமாக நிகழ்ச்சியில் குவிந்திருந்தனர்.

புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒரு சக்தியா? அதுவும் நித்தியின் உடம்பிலா? எந்த சக்தியைக் கொண்டு அவர் பக்தர்களை மிதக்க வைக்கப் போகிறார்? ஏதேனும் மந்திரக்கோல் வைத்திருப்பாரோ? என்கிற கேள்விகளுடன், ஏகத்துக்கும் ஆச்சரியமும் எதிர்பார்ப்புமாக காத்திருந்தனர் பக்தர்கள். கூட்டம் நிரம்பியதை அறிந்து, தனக்காக ஏக அலங்காரத்துடன் மேடையில் உருவாக்கப்பட்டிருந்த பெரிய்ய சிம்மாசனத்தில்’தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வந்தமர்ந்தார் நித்தி.

அப்போது நித்தி,’""நான் இப்போ உங்களுக்கு ஒரு அதிசயம் காட்டப்போகிறேன். குண்டலினி சக்தியின் வலிமை உங்களுக்குத் தெரியும். அந்த சக்தியைக்கொண்டு, புவியீர்ப்பு விசைக்கு எதிரா உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்கப்போகிறேன்''’’என்றார் ஒரு லத்தியை இடது கையில் வைத்து ஆட்டியபடியே. அந்த லத்தியைப் பார்த்து அடிக்கடி, "ப்பூ... ப்பூ...' என்று ஊதிக்கொண்டிருந்த நித்தி,’’""குண்டலினி சக்தியை நீங்க அடையணும்னா உங்களுக்கு வயசாகிடும். அதனால நானே அந்த சக்தியை வைத்திருக்கிறதால அதைக்கொண்டு உங்க உடலை தரையைவிட்டு எழுப்பிக்காட்டு றேன்''’என்றார்.

அந்த ’சொற்பொழிவைக் கேட்டு மேலும் பரவசமான பக்தர்கள், தங்கள் உடல் அந்தரத்தில் மிதக்க போவதால் மீண்டும் ஒருமுறை தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர். அந்தரத்தில் உடல் மிதக்கப் போவதால்... திடீரென்று கீழே விழுந்து தலை அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சீடர்கள் சிலர் ஹெல்மெட் வேறு அணிந்திருந்தனர். இதைப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருந்தது. ஹெல்மெட் அணியாத சீடர்கள் ஹெல்மெட் அணிந்தவர்களை ஏதோ வேற்று கிரகத்து ஆசாமியைப்போல பார்த்தனர்.

தனது கையில் வாளும் கேடயம் மாதிரி ஒன்றையும் வைத்துக்கொண்டிருந்த நித்யா னந்தா, கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பிறகு கண் களை திறந்து வாயை குவித்து மீண்டும் முணுமுணுக்க "சூ... சூ... ப்பூ... ப்பூ...' என்கிற ஓசைகள் வெளிப்பட்டது. பக்தர்களும் சீடர்களும் கண்ணிமைக்காமல் நித்தியை கவனித்துக் கொண்டிருந்தனர். சில பக்தர்கள் நித்தியைப் போலவே "ச்சூ... ச்சூ...' என ஓசை எழுப்பி னார்கள்.


"ம்... நடக்கட்டும்... படை திரளட்டும்...' என்று "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யில் வடிவேலு சொல்வதுபோல சீடர்களைப் பார்த்து தனது வலது கையை நீட்டி நித்தி சைகை செய்ய, நித்தியைச் சுற்றி மேடையில் இருந்த சீடர்களும் கீழே அமர்ந்திருந்த பெண் சீடர்களும் உட்கார்ந்த நிலையிலேயே சாமியாடினார்கள். அப்போது நித்தி,’’""சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்தே உடம்பை எம்பி எம்பி குதியுங் கள்.. ஒரு கட்டத்தில் உங்க உடல் அந்தரத்தில் மிதக்கும்''’என்று சொல்ல, அதேமாதிரி எம்ப முயன்றனர். ரஞ்சிதாவைப் பார்த்து, "நீயும் குதி..' என்கிற தொனியில் நித்தி சைகைக் காட்ட... தனது சேலையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு ஆவேசம் வந்தவர் மாதிரி... துள்ளிக் குதிக்கத் துவங்கினார் ரஞ்சிதா. குதித்துக்கொண்டிருந்தவர்களிடமிருந்து வினோதமான ஒலிகள் எழுந்தன. ஹெல்மெட் மாட்டிக்கொண்டிருந்த ஒருவர் நித்தியிடம் போய் "என்னையும் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியுமா?' என்று கேட்க, ""ம்... முடியும் நீயும் குதி..'' என்றார். அந்த ஹெல்மெட் ஆசாமியும் துள்ளாட்டம் போட்டார்.
துள்ளாட்டமும் குதியாட்டமும் சில நிமிடங் கள் நீடிக்க... தரை யைவிட்டு ஒருத்தருடைய உடலும் ஒரு இன்ஞ் கூட மேலே எழும்பவில்லை. துள்ளாட்டம் போட்ட பலருக்கும் கழுத்து சுளுக் கிக்கொண்டது போல.. .தங்கள் கழுத்தை பிடித்துக் கொண்டே’"அப்பாடா... முடியல...'’என்றபடியே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர். தான் சொன்னபடி யாருடைய உடம்பும் அந்தரத்தில் மிதக்காததால் சற்றே அதிர்ச்சியடைந்தார் நித்தி. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சிரித்துக்கொண்டே இருந்தார் நித்யா னந்தா. கொஞ்சம்கூட அவரிடம் வெட்கமோ கூச்சமோ தெரிய வில்லை.

வெளிநாட்டு பக்தர்கள் பலரும் "எங்களை முட்டாளாக்கு கிறீர்கள்'’என்று சத்தம் போட, அவர்களை நித்தியின் உள்ளூர் சீடர்கள் சமாதானப்படுத்துகிற விதத்தில் அடக்கினார்கள். சிலர் நித்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போதும்  கொஞ்சம்கூட லச்சையில்லாமல் ’’"குதிச்சிக்கிட்டே இருந்தா    உடம்பு மேலே போகும். நிறுத்தக்கூடாது. ஏன் நிறுத்துனீங்க. நிறுத்துனதுனாலதான் உங்க உடம்பு மேலே போகல'’என்று காமெடிபண்ணி  மழுப்பினார்.


இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றிய நித்யானந்தாவின் குண்டலினி சக்தி பற்றி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்துள்ள இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் ராம.கோபாலனிடம் கேட்டபோது,’’""நமது உடலில் 6 சக்கரங்கள் உண்டு. அந்த 6-ம் ஆறுவிதமான சக்தி கொண்டது. அதில் ஒன்று குண்டலினி சக்தி. இந்த சக்தி மூலம் நமது உடலை அந்தரத்தில் மிதக்கவைக்க முடியும். மிகுந்த தவமிருந்து கிடைக்கப் பெறுகிற வலிமை இது. ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப்பெரிய யோகி. தவ வலிமை மிக்கவர். தனது குண்டலினி சக்தியால் இறைவனை பார்த்தவர். ஒருமுறை அவரிடம் ஒரு சீடர்,’"ஸ்வாமி... அங்கே பாருங்கள்... ஒருவர் கடலில் நடந்து வருகிறார்'’என்று சொல்ல,’ "அதெல்லாம் 5 பைசா வேலை இது'’என்று சொன்னார் பரமஹம்ஸர். விஞ்ஞான ரீதியாக குண்டலினி சக்தி மூலம் உடலை அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும். பல சித்தர்களும் யோகிகளும் இதனை செய்திருக்கிறார்கள். ஆனால் நித்யானந்தாவால் முடியுமா? முடியாதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு முறையான பயிற்சி அவருக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை'' என்கிறார்.

இந்து சமயத்தை பாதுகாக்கும் பணியில் கடந்த 15 வருடங்களாக ஈடுபட்டு வருபவரும் ஆன்மிக சாமியார்களின் மோசடிகளுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருபவருமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,’""நமது உடலின் மூலா தாரத்திலிருந்து 6 சக்தி மையங்கள் மூலம் முதுகுத்தண்டு வழியாக உயிர்நிலையை நெற்றிக்கு கொண்டுவரும் சக்திக்கு குண்ட லினி சக்தி என்று பேர். தன் னைத்தானே உணரும் சக்தி இது. இந்த சக்தியை பயன்படுத்தும் போது நமது உடல், காற்றைவிட மிக லேசாக ஆகிவிடும். புவி ஈர்ப்பு விசையை விட லேசாக இருக்கும். அதனால் உடல் அந்தரத்தில் மிதக்கும். இதை ஒருநாளில் பெற்றுவிட முடியாது. கடுமையான மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி என பன்னெடுங்காலம் செய் திருந்தால் மட்டுமே இது சாத்தியம். அருள்மிகு வள்ளலார் குண்டலினி சக்தியைப் பெற்றவர். அதை பலமுறை நிரூபித்திருக்கிறார்.     அந்த சக்தியைத்தான் தனது தலைக்கு மேலே ஜீவஜோதியாக கொண்டிருக்கிறார் வள்ளலார். ஆனந்தமான நிலை இது. அதே போலத்தான் தனது சீடர் விவே கானந்தருக்கு தனது தவ வலிமையைக்காட்ட குண்டலினி சக்தி மூலம் அந்தரத்தில் மிதந்தார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். நான்தான் பரமஹம்ஸர் என உதார்விடும் நித்யானந்தா, முதலில் தனது உடலை அந்தரத்தில் மிதக்கவைத்து காட்டட்டும். அப்புறம் தனது சீடர்களின் உடலை மிதக்க வைக்கலாம். நாங்கள் சவால் விடுகிறோம்... இவர் அந்தரத்தில் மிதப்பாரா? மிதக்க முடியுமா? உள்ளத்தில் தூய்மை, உடலில் தூய்மை, பிரம்மச்சர்யம் கடைப்பிடித்தல் போன்ற குணங்களாலும் கடுமையான தவ வலிமையினாலும் மட்டுமே இந்த சக்தியைப் பெற முடியும். ஆனால் இந்த குணங்கள் எதுவும் நித்திக்கு கிடையாது. இவருக்குத் தெரிந்ததெல்லாம் 30 வயது இளைஞனுக்கு இருக்கும் லௌகீக குணங்கள்தான். இதனை இவரை நம்பிப்போகும் நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகப் பெண்கள்'' என்கிறார் அதிரடியாக.

துள்ளாட்டம், குதியாட்டம் மூலம் நித்தி- ரஞ்சி ஜோடியின் மற்றொரு மோசடி முகம் கிழிந்து தொங்கி குப்பையாகி கழுதையின் வாயில் போய்க்கொண்டி ருக்கிறது..

-ஆர்.இளையசெல்வன்


 ""எல்லாமே பொய்'' -வக்கீல் ஸ்ரீதர்


நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்தவர் ஸ்ரீதர். ஆனால், "நக்கீரன் சார்பில் நித்யானந்தாவை மிரட்டியதே இவர்தான்' என ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் மீதே சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நித்தி தரப்பில் நித்ய ஆத்மபிரபானந்தா.

இந்தப் புகாரின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 18-ந்தேதி மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார் வக்கீல் ஸ்ரீதர்.

அப்போது, ""நக்கீரன் சார்பில் நீங்கள்தான் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதே?'' என்று கேட்கப்பட்டபோது, ""இது பொய். நட்பு ரீதியாகக் கூட நக்கீரனோடு எனக்குப் பழக்கம் இல்லை. நக்கீரன் பத்திரிகை சார்ந்த எவரோடும் எனக்குத் தொடர்பு கிடையாது. அந்தப் பத்திரிகை மீது 2 வழக்குத் தொடர்ந்தவனே நான்தான். அதனால் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது'' என்றார்.

நித்ய ஆத்ம பிரபானந்தாவை கடத்திப் போய் 100 கோடியில் ஆரம்பித்து 60 கோடி கேட்டு மிரட்டினீர்களாமே?'' என்ற கேள்விக்கு, ""நித்ய ஆத்ம பிரபானந்தா கொடுத்த புகாரில் 2010 பிப்ரவரி 16 மற்றும் 22-ந்தேதிகளில் அவரை நான் மிரட்டியதாக சொல்கிறார். ஆனால் 2010 மார்ச் 4-ந்தேதி நானும் நித்ய ஆத்ம பிரபானந்தாவும் சேர்ந்துதான் நித்யானந்தாவுக்காக செய்தி யாளர்களை இதே இடத்தில் சந்தித்து பேட்டி தந்தோம். அப்படியிருக்க, அவரை எப்படி கடத்திக் கொண்டு போய் மிரட்டியிருக்க முடியும்? நான் மிரட்டியிருந்தால் என்னோடு சேர்ந்து அவரால் எப்படி பேட்டி தரமுடியும். அதனால் அவர் சொல்வது எல்லாமே பொய்!'' என்றார்.









-----------------------------------------------------------------------------------------------------
திடீரென்று கீழே விழுந்து தலை அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சீடர்கள் சிலர் ஹெல்மெட் வேறு அணிந்திருந்தனர் <<<<< அழுவதா சிரிப்பதான்னு தெரியலை !
-------------------------------------------
http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=9867

Monday, July 25, 2011

Protests against Nithyananda across Tamil Nadu



http://www.youtube.com/watch?v=pLsPnv9QwKw

Nithyananda - Legal case, Guru poornima & Hindu Makkal leader press meet



http://www.youtube.com/watch?v=zVHkyl4wjpU


TV9 - NRI case against Nithyananda Swamy

பெங்களூர் நிருபர் பரபரப்பு பேட்டி குண்டலினி யோகா பெயரில் மக்களை ஏமாற்றுகிறார் நித்தி


பெங்களூர் : ‘குண்டலினி யோகா என்ற பெயரில் நித்தியானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார்’’ என்று கர்நாடகாவை சேர்ந்த நிருபர் கிரண் குமார் கூறினார்.. பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த 15ம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செய்தி சேகரிக்க சென்றேன். அப்போது, நித்தியானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.

உடனே அவரிடம், ‘எனக்கு பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா, கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது’ என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். ‘எனது உடல் அமைப்புதான் இளைஞனை போன்றது. உணர்வுகள் 6 வயது சிறுவனை போன்றது. எனவே, எனது சக்தி  அபிரிமிதமானது’ என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார்.

இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்தியானந்தா போலி சாமியார் என்பதை தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனி மேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு கிரண் குமார் கூறினார்.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=1991

நித்யானந்தா வழக்கை விரைந்து முடித்து தண்டனை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தி.க.வினர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் மாவட்ட தி.க. இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில், நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையை துரித்தப்படத்தி தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், வழக்கு நிலுவையில் உள்ள போது விசாரணையை பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை அச்சுறுத்தும் தன்மையிலும் சென்னைக்கு வந்து பகிரங்கமாக பேட்டியளித்தது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், மகளிரணி அழகுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டலச் செயலாளர் பழ.வெங்கடாசலம் ஆர்ப்பாட்டவுரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தி.க. தலைவர் திருப்பதி, மாவட்ட செயலாளர் திராவிடமணி, சேலம் மண்டலச் செயலாளர் தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் துக்காராம், மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் வனவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர இளைஞரணி தலைவர் ராஜா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நித்யானந்தா மீதான வழக்கை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

http://health.dinakaran.com/District_detail_2011.asp?Nid=756

சாட்சிகள் மீது செல்வாக்கை திணிக்க முயற்சி நித்யானந்தா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் திராவிடர் கழகம் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்   7/25/2011 14:12:44
 தர்மபுரி: சாட்சிகள் மீது தன் செல்வாக்கைக் திணிக்கும் விதமாக பேட்டி கொடுத்த நித்யானந்தாவின் வழக்கு விசாரணை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வேண்டும் என்று தி.க. தலைமை சொற்பொழிவாளர் அண்ணாசரவணன் பேசினார்.
தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம், மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தாவின், ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி ராஜகோபால் பூங்கா அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. மகளிரணி மாவட்ட அமைப்பாளர் நளினி தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் காமராஜ், செயலாளர் காரல்மார்க்ஸ், தி.க. மகளிர் பாசறை சாந்தி, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி நிர்வாகி சுடரொளி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைமை சொற்பொழிவாளர் அண்ணா சரவணன் பேசியதாவது:
பாலியல் குற்றவாளி நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி தண்டனை வழங்க வேண்டும். நித்யானந்தாவின் வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கைப் பாதிக்கும் வகையில் சாட்சிகள் மீது தன் செல்வாக்கைக் திணிக்கும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறார். சட்டத்தின் பார்வையில் இவரது செயல்கள் சரியானது தானா?. நித்யானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.க. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் சிவாஜி, பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் தகடூர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் ஊமைஜெயராமன், வேங்கன், மாவட்ட துணை தலைவர் கதிர், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், சிசுபாலன், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தி.க. மகளிரணி நிர்வாகி அருள்மொழி நன்றி கூறினார்.

http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=721

சாட்சிகளை அச்சுறுத்தும் நித்தியை கைது செய்ய வேண்டும்

7/24/2011 6:49:39


சென்னை: சாட்சிகளை அச்சுறுத்தும் நித்யானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக மகளிர் அணி, இளைஞர் அணி சார்பில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், பொருளாளர் கோ.சாமிதுரை, தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவி உடையில் நித்யானந்தா வேடம¢ அணிந்தவருக்கு கையில் விலங்கு மாட்டியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவரை துடைப்பத்தால் அடித்தனர்.
கூட்டத்தில் கலி.பூங்குன்றன் பேசியதாவது:
போலி சாமியார்கள் தங்களை கடவுளின் அவதாரமாக கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எச்சில் சாமியார், அழுக்கு சாமியார், பீர் சாமியார், சுருட்டு சாமியார் வரிசையில் இப்போது பாலியல் சாமியார் நித்யானந்தா சேர்ந்துள்ளார். டிவிக்களும், பத்திரிகைகளும் அவரின் பாலியல் குற்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தின.
இதுதொடர்பான வழக்கு கர்நாடகத்தில் நடந்து வருகிறது. போலீசுக்கு பயந்து, வடநாட்டுக்கு ஓடிப்போன நித்யானந்தா, 18 மாதத்துக்கு பிறகு சென்னைக்கு வந்து, அந்த வீடியோ காட்சி போலியானது என்கிறார். நித்யானந்தாவின் வீடியோ காட்சிகள் உண்மையானதுதான் என கர்நாடக போலீசார் கூறிவிட்டனர். ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, குறிப்பிட்ட ஊடகங்கள் மீது மட்டும் புகார் கொடுக்கிறார்.
பெண்களை மையமாக வைத்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள நித்யானந்தா விவகாரத்தில் பெண்ணாக இருக்க கூடிய முதல்வர் கவனமாக கடமையாற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் என்பது, ஒழுக்கக்கேட்டுக்கு துணை போகக் கூடாது.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது விசாரணையை பாதிக்கும் வகையில் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சென்னையில் நித்யானந்தா பேட்டி அளித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல். எனவே, ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலி.பூங்குன்றன் பேசினார்.  தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரம் மற்றும் புதுச்சேரியிலும் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=1932

Wednesday, July 20, 2011

Nakkeeran Presents Sridhar - Nithy Connection


நித்தியை கைது செய்ய கோரி திக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

சாமியார் நித்யானந்தாவை தமிழகத்தில் நுழைய அனுமதிக்க கூடாது, கர்நாடக கோர்ட் வழங்கி உள்ள ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய வேண்டும், நித்யானந்தா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மற்றம் மாவட்ட இளைஞரணி சார்பில் ஈரோட்டில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகேஸ்வரி தலைமை தாங்குகிறார்.

மாநில இளைஞரணி துணை செயலாளர் வைரம், மண்டல இளைஞரணி செயலாளர் நடராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன்,

கோபி மாவட்ட தலைவர் கருப்பசாமி, செயலாளர் சவுந்தர், ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்ற உள்ளார்.

நித்தி - ரஞ்சி அண்டப்புளுகு ஜோடிக்கு நக்கீரன் விடும் சவால்!




       ன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல் நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார், சென்னையில் ஜூலை 13-ந் தேதி பேட்டியளித்த சாமியார் நித்யானந்தா. தானும் ரஞ்சிதாவும் சேர்ந்திருக்கும் வீடியோ காட்சிகள்  ‘மார்ஃபிங்’(போலியாக) செய்யப்பட்டவை என்றும், இதனை வெளியிடாமல் இருப்பதற்காக தங்களை மிரட்டியதாகவும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் பேட்டியளிக்க, நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நித்ய ஆத்ம பிரமானந்தா, இது தொடர்பாக நக்கீரன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

2010 மார்ச்  முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா-ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள்  பெரும் அதிர்வை உண்டாக்கின. பல்வேறு ஊடகங்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இந்த வீடியோ பதிவு டி.வி.டிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. உலகெங்கும் கிளைகள் கொண்ட அமைப்பின் துறவியான நித்யானந்தா, இப்படி ஒரு முரண்பாடான காரியத்தில் ஈடுபட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சமூக அக்கறையுடன்தான் நக்கீரன் இதனை வெளியிட்டது. இதற்காக நக்கீரன் மீது புகார்  கொடுத்துள்ளது நித்யானந்தா ஆசிரமம்.    


அந்தப் புகாரில் நக்கீரனுடன் மேலும் சில நிறுவனத்தைச் சார்ந்தவர்களின்  பெயர் களும் இடம்பெற்றிருப்ப தோடு, நித்யானந்தா வின் வக்கீல் ஸ்ரீதர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அவரைப் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ள புகாரில், 17.2.2010 அன்று  கோவையில் நித்யானந்தா இருந்த போது, அவரைப் பார்ப்பதற்காக ஒரு துண்டு சீட்டுடன் வக்கீல் ஸ்ரீதர் வந்தார் என்றும், அவரை நித்யானந்தா பார்க்க மறுத்து விட்டார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்பின், 21.2.2010 அன்று நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நித்ய பிராணா னந்தா என்பவரிடம் வக்கீல் ஸ்ரீதர் பேசுகிறார்.


22-2-2010 அன்று நித்ய பிராணானந்தா, சதானந்தா, பக்தானந்தா ஆகியோர் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வக்கீல் ஸ்ரீதரை சந்திக்கிறார்கள். பிப்ரவரி 22-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது வக்கீல் ஸ்ரீதர் 60 கோடி ரூபாய் பணமும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் சொத்துகளும் கேட்டு பிளாக்மெயில் செய்தார் என்று நித்யானந்தா தரப்பின் புகா ரில் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், வக்கீல் ஸ்ரீதர், நக்கீரனில் செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டிய தாகவும், நக்கீரனும் நித்யானந் தாவை பிளாக்மெயில் செய்ததாக வும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா தந்துள்ள புகாரி லும் நக்கீரன் பிளாக் மெயில் செய்த தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்றால், நக்கீரன் மீது சென்னை 15-வது சிட்டி சிவில் கோர்ட்டில் 3.3.2010-ல் நித்யானந்தா தரப்பிலிருந்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், நக்கீரனுக்கு எதிராக, நித்யானந்தா சார்பில் ஆஜரானவர் இதே வக்கீல் ஸ்ரீதர்தான். வழக்கு பெண்டிங்கில் இருக்கும்போது, நித்யானந்தா சார்பில் ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப் போர்ட்டருக்கு பேட்டி தந்தவரும் இதே ஸ்ரீதர்தான். 2010 மார்ச் 4-ந் தேதி நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் பிரஸ் மீட் கொடுக்கப்பட்டது. ஆசிரம நிர்வாகி ஆத்மா பிரபானந்தாவுடன் (படம் வெளி யிட்டுள்ளோம்) வக்கீல் ஸ்ரீதரும் இருந்தார்.

 மார்ச் 3-ந் தேதி தொடங்கி 19-ந் தேதிவரை தினமும் கோர்ட் டில் வாதங்கள் நடைபெற்றன. அதிலும், நித்யானந்தா தரப்பு வழக்கறிஞராக,  ஸ்ரீதர் தொடர்ந்து ஆஜரானார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் டி.வி. நிறுவனம் கொடுத்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து, சென்னையில் போடப்பட்டிருந்த வழக்குகளையும் 19-ந் தேதியன்று, தானாகவே  வாபஸ் வாங்கிக் கொண்டது நித்யானந்தா தரப்பு. இதில், நக்கீரன் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. நித்யானந்தா தரப்பும், இந்த வழக்கு விசாரணையின்போது எந்த ஒரு தருணத்திலும், தங்களை நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாகத் தெரிவிக்கவில்லை.

ஸ்ரீதர் என்பவர் நித்யானந்தா ஆசிரமத்திற்கு வேண்டியவ ராகவும் அவர்களுக்காக வழக்கில் ஆஜராகக்கூடியவராகவும் இருந்திருக்கிறாரே தவிர, அவருக்கும் நக்கீரனுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது நீதிமன்றத்தில் யாருக்காக ஸ்ரீதர் ஆஜரானார் என்பதிலிருந்தே தெரிகிறது.

இதன்பின் மீண்டும் 4.4.2010-ல் உயர்நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கை நக்கீரனுக்கு எதிராகத் தாக்கல் செய்தது நித்யானந்தா தரப்பு. இந்த வழக்கு தற்போது 5-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கிலும் ஒவ்வொரு வாய்தாவின்போதும் நித்யானந்தா தரப்பிலிருந்து நித்ய ஆத்ம பிரபானந்தா ஆஜராகிறார். ஒரு முறைகூட, நக்கீரன் பிளாக்மெயில் செய்த தாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்கு மூலத்திலும் தெரிவித்ததில்லை. இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையிலேயே, நக்கீரன் மீது 10 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு களை நித்யானந்தா தரப்பு தொடர்ந்தது. அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் எந்தவொரு வழக்கிலும் ப்ளாக்மெயில் என்று இதுவரை தெரிவிக்கவில்லை.


அதுபோலவே, நடிகை ரஞ்சிதா கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கர்நாடக மாநிலம் ராம்நகர்  ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த பிரைவேட் கம்ப்ளைண்ட் டில் தர்மானந்தா, ஆர்த்திராவ், வக்கீல் ஸ்ரீதர் ஆகியோர் மீது புகார் தெரிவித்திருந்தார். இதி லும், நக்கீரன் தன்னை மிரட்டிய தாகக் கூறவில்லை. பின்னர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 28.2.2011 அன்று ஒரு ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்தார். அதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 39  பத்திரிகைகளில் தன்னைப் பற்றிய செய்திகள் வெளியிடுவது தொடர்பாகத் தெரிவித்திருந்தார். அந்த வழக்கிலும், நக்கீரன் தன்னை பிளாக்மெயில் செய்வதாக ரஞ்சிதா தெரிவிக்கவில்லை. ஆக, முதலில் நக்கீரன் மீது நித்யானந்தா வழக்கு தொடுக்கிறார். அதில் எந்த  இடத்திலும் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக சொல்லவில்லை. அடுத்து சதானந்தா பெயரில் நக்கீரன் மீது ஒரு வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கிலும் நக்கீரன் பிளாக் மெயில் செய்ததாக சொல்லவில்லை. கடைசியாக நித்ய ஆத்ம பிரபானந்தா என்பவர் சதானந்தாவின் ஏஜெண்டாக நீதிமன்றத்தில் கொடுத்த பிரமாண வாக்குமூலத்தில் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக எந்த இடத்திலும் சொல்லவில்லை.

தற்போது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக பேட்டி அளித்திருப்பதுடன் அவர்கள் தரப்பிலான புகாரிலும் அதனைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பொய்க் குற்றச்சாட்டை நக்கீரன் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறது. நித்யானந்தாவையோ ரஞ்சிதாவையோ நக்கீரன் தொடர்பு கொள்ளவேயில்லை. வீடியோ காட்சிகள் அப்பட்டமாக இருந்ததால், அவர்களின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவைகூட ஏற்படவில்லை. உண்மையை  உலகத்திற்குத் தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை வெளியிட்டோம்.

அண்ட புளுகுணி ரஞ்சிதா 12-07-2011 அன்று பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் நித்யானந்தருடன் இருப்பது நான் அல்ல அது, மார்ஃபிங் முறையில் சித்தரிக் கப்பட்டது. எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை(?) என்று சொல்லியுள்ளார்.


ஆனால் 14-03-2010 அன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டரில் ""சுவாமி நித்யானந்தாவின் காலைப் பிடித்து விடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான் அதைத்தான் நான் செய்தேன்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். இத்தனை யையும் மறைத்து அண்ட புளுகு ஆகாச புளுகு அளவுக்கு பொய் சொல்லியிருக்கிறார் ரஞ்சிதா.

நித்யானந்தா-ரஞ்சிதா பேட்டி களில் நக்கீரனை நோக்கி வைக்கப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டு, தங்கள் பெயரைக் கெடுக்கும் வகையில் மார் ஃபிங் வீடியோ வெளியிடப்பட்டது என்பதுதான். நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் உண்மையானவை யா, உருவாக்கப்பட்டவையா என்பதை தடயவியல் அறிவியல் சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
நித்யானந்தா மீதான வழக்கை விசாரித்துவரும்  கர்நாடக மாநில போலீசின் சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜியான ஐ.பி.எஸ் அதிகாரி கே.எஸ்.ஆர்.சரண் ரெட்டி, இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினார். மதுபான் சவுக், செக்டர் 14, ரோகினி, டெல்லி- 110 085 என்ற முகவரியில் உள்ள இந்த ஆய்வகம் தேசிய அக்ரடிஷன் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனமாகும்.

கர்நாடக சி.ஐ.டி அனுப்பிய ஆவணங்களை 27-7-10 அன்று பெற்றுக் கொண்ட தடய அறிவியல் ஆய்வகம், 12.11.10 அன்று தனது பரிசோதனை அறிக்கையை கொடுத்துள்ளது. பரி சோதனைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டவை எவை எவை, அவற்றை எந்த முறையில் ஆய்வுக்குட்படுத்தினோம், அவற்றின் முடிவுகள் என்ன என்பது தான்  இந்த அறிக்கையின் சாராம்ச மாகும்.

ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பொருட்களுக்கு குறியீட்டு எண் கொடுத்தது  தடய அறிவியல் ஆய்வகம்.
Exhibit-1 என்ற குறியீடு கொண்ட  வீடியோவில் இருந்த ஆணின்  முகம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு Exhibit-QMFI  என்ற குறியீடும், அந்த ஆணுடன் நெருக்கமாக இருந்தபடி, ஸ்பை கேமராவை  அட்ஜஸ்ட் செய்யும்  பெண்ணுக்கு Exhibit-QFFI என்றும் குறியீடு கொடுக்கப்பட்டது. (ஆண் என்பது நித்யானந்தாவையும் பெண் என்பது ரஞ்சிதாவையும் குறிக்கும்).  இதுபோல,  Exhibit-2   என்ற குறியீடு கொண்ட வீடியோவிலும் இதே போல ஆண், பெண் உருவங்களுக்கு குறியீடுகள் கொடுக்கப்பட்டன.

Exhibit-3 என்ற குறியீடு கொடுக்கப்பட்ட, மோசர்பியர் டி.வி.டியில்  போட்டோக்களும் வீடியோக்களும் ஃபைல்களாக இருந்தன. அவற்றிலிருந்த பெண் உருவத்திற்கு Exhibit-SFFI எனக் குறியீடு தரப்பட்டது. (அதாவது, அந்த டி.வி.டியில் இருந்தவை  ரஞ்சிதா சம்பந்தப்பட்ட பழைய போட்டோக்களும் வீடியோ காட்சிகளுமாகும்.)

Exhibit-4    என்ற குறியீடு கொடுக்கப்பட்ட மோசர்பியர் டி.வி.டியில்  இருந்த போட்டோ மற்றும் வீடியோ ஃபைல்களில் இருந்த ஆண் உருவத்திற்கு Exhibit-SMFI என்ற குறியீடு கொடுக்கப்பட்டது. (இந்த டி.வி.டியில் இருந்தவை, நித்யானந்தா சம்பந்தப்பட்ட பழைய போட்டோக்களும் வீடியோ காட்சிகளுமாகும்.)

இந்தக் குறியீடுகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்ட  தடய அறிவியல் ஆய்வகம் உருவங்கள் பற்றிய ஆய்வு மற்றும் ஒப்பீடுகள் தொடர்பான ஆய்வில், Exhibit-QMFI  எனக் குறியிடப்பட்ட  (ஆண்) உருவமும், Exhibit - SMFI எனக் குறியிடப்பட்டுள்ள (ஆண்) உருவமும் ஒரே (ஆண்) உருவம்தான் என்பது கண்டறியப் பட்டுள்ளது. (அதாவது, ரஞ்சிதாவுடன்  வீடியோவில் உள்ள நித்யானந்தாவின்  உருவம், டி.வி.டியில் உள்ள நித்யானந்தாவின் பழைய போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பொருந்துகிறது.

Exhibit-QFFI  என குறியிடப்பட்டுள்ள (பெண்) உருவமும், Exhibit-SFFI என குறியிடப் பட்ட (பெண்) உருவமும் ஒரே (பெண்) உருவம் தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. (அதாவது, வீடியோவில் நித்யானந்தாவுடன் உள்ள ரஞ்சிதா வின் உருவம், டி.வி.டியில் உள்ள  போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பொருந்துகிறது.)

-இதுதான் டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்திய டாக்டர் சி.பி.சிங்கின் அறிக்கையாகும்.

தடய அறிவியல் ஆய்வகத்தின் முடிவுகள் மிகத் தெளிவாக உண்மையை விளக்குகின்றன. வீடியோ காட்சிகளைக் காணும்போதே சாதாரண மக்களால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.  உண்மை களை உரக்கச் சொல்வதுதான் நக்கீரனின் வழக் கம். பிரேமா னந்தா, ஜெயேந்திரர் ஆகியோர் தொடர்பான புலனாய்வு களிலும் அதிர வைக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியது நக்கீரன்தான். ஆன்மீகப் போர் வையில் நித்யானந்தா மேற்கொண்ட செயல்பாடு களையும் அதுபோலவே அம்பலப்படுத்தியது நக்கீரன்.


இதற்காக நக்கீரன் மீது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் பாய்கிறார்கள். இந்தப் பாய்ச்சலுக்கோ பூச்சாண்டிகளுக்கோ நக்கீரன் பயந்துவிடாது.  அணிந் திருக்கும் காவி உடைக்கான கண்ணியம் சிறிதுமின்றி, அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் நிறைந்திருக்கும் அரங்கில், நித்யானந்தா காறித் துப்புகிறார் என்றால், அவர் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறார் என்றுதான் அர்த்தம்.
இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்கிறார் நித்யானந்தா.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் சமூகத்தில் மதம் மற்றும் ஆன்மீகப் போர்வையில் ஒளிந்து கொண்டு மக்களை ஏமாற்றி பொழப்பு நடத்தும் காவி உடை தரித்த இவர்களை போன்ற மோசடிப் பேர்வழிகளை அம்பலப்படுத்துவதையும் அப்புறப்படுத்துவதையும் நக்கீரன் பொழப்பாக கொண்டுள்ளதால்தான் லட்சோப லட்சம் வாசகர்களுடன் இன்றும் கம்பீர மாக பவனி வருகிறது நக்கீரன்.

இதுதான் எங்கள் பொழப்பு!

நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யா னந்தாவும் ரஞ்சிதாவும்  நீதிமான்கள் -சட்ட வல்லு நர்கள் -தொழில்நுட்ப வல்லுநர்கள் -தடயவியல் நிபுணர்கள் -பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர்  முன்பாக  இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்க ளின் பரிசுத்தத் தன் மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?

-ஆசிரியர்

 அண்டப் புளுகு...!

நக்கீரன் மிரட்டியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தும் நித்யானந்தா, தனக்கு எதிராக வழக்கு தொடுத்து, ஆசிரமத்து விஷயங்களை வெளியே கொண்டுவந்த லெனின் தர்மானந்தாவிடம்  போனில் மிஞ்சியும் கெஞ்சியும் பேசியதையும் அதை லெனின் தர்மானந்தா டேப் செய்திருந்ததையும் ஏற்கனவே நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.

"ரஞ்சிதாவும் நானும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம். இதிலே என்னடா தப்பு?  புரிஞ்சுக்கடா தர்மா.. தயவு செய்து புரிஞ்சுக்கடா தர்மா.

எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேண்டா... உன் உயிருக்கு யாராலயும் எதுவும் நடக்காதுன்னு ரிட்டனா எழுதித் தர்றேன் தர்மா' என்று  நித்யானந்தா அதில் பேசியிருந்ததையும் வெளியிட்டிருந்தோம்.  நித்யானந்தாவின் கெஞ்சலுக்கும் மிஞ்சலுக்கும் பணியாத லெனின் தர்மானந்தா, நக்கீரன் மூலமாக, "அந்த வீடியோவில் இருப்பதை நித்யானந்தா பொய் என நிரூபித்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்' என்று ஓப்பனாக சொல்லியிருந்தார்.

தன்னுடைய நிலையில் இப்போதும் உறுதியாக இருக்கும் லெனின் தர்மானந் தா நம்மிடம், ""வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்பது உறுதியான விஷயம். நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட பெண் பக்தர்கள் பல பேர் இருக்கிறார்கள். சாமியார் என்ற போர்வை யில் உலவும் மோசமான வேடதாரி.  அவரை நம்பி இனி எந்தப் பெண்ணும் ஏமாறக்கூடாது என்றுதான் உயிரைப் பணயம் வைத்து ஆசிரம ரகசியங்களை அம்பலப்படுத்தினேன்.

கர்நாடகாவில் வழக்கு நடக்கும் நிலையில், அங்கிருந்து இங்கே வந்து, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்.  இந்துமதத்தின்  பாதுகாவலர் போல பாவ்லா செய்கிறார். அவர் எந்த விதத்திலும் இந்து மதத்திற்கு பயன்படவில்லை. அவர் சொல்வது எல்லாம் பொய் என்பது இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.

நித்யானந்தாவை யாரும் ப்ளாக்மெயில் செய்யமுடியாது. அவர்தான் எல்லோரையும் ப்ளாக் மெயில் செய்வார். அதற்குப் பயந்து பல பெண்கள், உண்மைகளைப் பேசாமல் இருந்திருக்கிறார்கள். நித்யானந்தா பற்றி நான் அம்பலப்படுத்திய அனைத்தும் உண்மை. இப்போதும் சொல்கிறேன், அதை பொய் என்று நிரூபித்தால், தமிழக மக்கள் என்னைக் கல்லால் அடித்தே கொல்லட்டும்.''

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(6)
Name : Edwin Date & Time : 7/18/2011 7:12:54 PM
-----------------------------------------------------------------------------------------------------
சபாஷ்
-----------------------------------------------------------------------------------------------------
Name : paul santhosh Date & Time : 7/17/2011 5:47:36 PM
-----------------------------------------------------------------------------------------------------
எல்லாம் சரிதான், ஆனாலும் இந்து மதத்துக்கு எதிரா ஏதோ சதி நடக்கப்லே தோணுது. மாயாண்டி, முநியன்டின்னு பேரு வச்ச கேவலமா நேனைகிற ஊரு தானே. ஜ்ஹோன் , பால், இல்யாஸ், எப்படி பேருவட்ச நகரிகம்னு நினைக்ரங்க. அவங்க ஊர்லே அவங்க பேரு கேவலம் தான், ....
-----------------------------------------------------------------------------------------------------
Name : nadarajan Date & Time : 7/16/2011 6:14:39 PM
-----------------------------------------------------------------------------------------------------
வாழ்க வெல்க நக்கீரன் கோபால் அண்ணன் உங்கள் பனி
-----------------------------------------------------------------------------------------------------
Name : balasubramanian Date & Time : 7/16/2011 6:14:39 PM
-----------------------------------------------------------------------------------------------------
சார், ithu உங்களை மறுபடியும் ஒரு யுத்தத்திற்கு தயார் படுத்தும் நிகழ்ச்சி.எய்தவன் இருக்க அம்பை விட்டுவிடுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------
Name : ram Date & Time : 7/16/2011 3:49:47 PM
-----------------------------------------------------------------------------------------------------
well done nakkheeran
-----------------------------------------------------------------------------------------------------
: :
http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=9847

I will stand strong and deal with it: Lenin

after allegedly filming Nityananda and Ranjitha in a sex romp, Lenin Karuppan has now taken precautions to face any eventuality dealing with cases filed against him by the duo

A year and a half after Swami Nithyananda's infamous sex scandal broke the news, both
Ranjitha and the scandalised swami are playing their cards well with an alleged eye for politics. However, the man reportedly behind exposing the spicy sex tape, is now planning to go against the duo in the case.


Not a Chauffeur: Lenin clarified that he was not the disgraced
godman's driver as was being portrayed earlier. Pic/Satish Badiger


Actress Ranjitha accused Lenin Karuppan, initially portrayed as Nithyananda's driver and ardent devotee, of attempt to rape and he was further accused of extortion by Nithyananda's trust.


Now Lenin appears to have found an innovative way to recover from those nasty allegations and he and his supporters have taken to popular social networking site, Facebook, to make his statements public. Calling his supporters' initiative 'India against Holy fraud', Lenin said he is a one-man army.


Talking exclusively to MiD DAY he said, "I am a single man army. Actress Ranjitha and Swami Nityananda have been holding press conferences in Chennai to corner me by claiming that I was targeting them. Ranjitha has filed a fresh case against me in Chennai and I'll stand strong and deal with it."

'Devotee not driver'
Lenin further clarified that he was not the disgraced godman's driver as was being portrayed earlier. "I joined the ashram as a devotee in 2004 and in 2006 became a full fledged devotee. I used to visit the ashram in my own car and was not a driver," he said. Giving up his pest control business, he said that he felt strongly about the activities going on within the ashram in 2009.

"That is why  planted a camera inside the ashram in December 2009," claimed Lenin. The spicy footage was aired in March 2010. Post this, many cases were filed against Lenin in the Ramnagar court and now a case pertaining to threat has been filed by Ranjitha in Chennai.

Lenin informed that he will not budge and said that all attempts to stop him from fighting this case will yield no results. "I have faith in the advocate who is fighting on behalf of the CBI to prove the authenticity of the footage," he asserted.

C H Jadhav, High Court advocate and standing counsel for CBI, has alleged, "It's nothing but a fresh attempt to tamper and threaten the witness and complainant in the case." Reacting to the same, Nithyananda's personal assistant, Sachid swami said, "We have no worries. Let him do whatever he wants. We know that the law is on our side."

Lenin has now alleged that he is facing legal threats in the form of cases filed against him. He has 10 cases pending against him, out of which eight are in Karnataka. Three cases are pertaining to attempt to rape and now he plans to move the Supreme Court to challenge the summons issued by the JMFC court Ramnagar, to appear before the court on August 1, 2011.
Other side of the fence?
In a reversal of roles, the advocate who represented disgraced Swami Nityananda through the difficult period of revelations, has been forced to run for cover after his own client has turned the tables on him. M Sreedhar is now being accused of backstabbing and Nityananda is setting up the stage to drag him to court. The sex swamy has claimed that Sreedhar might have struck a deal while he was defending him as a client. "Sun Group and Nakiran Gopal, who the editor of a local daily, have tried to strike a deal against me using my own advocate Sreedhar as a pawn," Nityananda said while in Chennai. Countering this allegation, Sreedhar has now decided to file a defamation case against the swamy for Rs 10 crore. "Nityananda has made an allegation against me claiming that I have been trying to strike a deal with the Sun Group against him. Now I will take legal recourse on the matter," said Sreedhar.

In what is being portrayed as a massive legal battle, each of the parties involved are slapping various cases against the other. In all there have been over 20 legal suits filed against Nityananda, Ranjitha, Lenin and now Sreedhar. 
Nityananda seems to be having no respite with religious organisations now attacking him openly. A group called the Hindu Makalkatchi from Chennai has slapped a case against Nityananda, of misusing the religious robe. The administrative head of the group, Arjun Sampath, who petitioned this charge said, "He has hurt religious sentiments and we are disappointed as he has misused the holy robes to further his agenda."


Credits: Mid-Day News

நித்யானந்தா,TV9 - LENIN AGAINST NITHYANANDA "SEX CD"








Mr Lenin Karuppan, the former associate of controversial godman Swami Nithyananda, has alleged that Nithyananda and the other accused in the sex scandal case were lodging false cases against key witnesses of the case to force them to withdraw from the trail. Addressing reporters, Mr Lenin said that of the 12 key witnesses named by the CID, 11 were facing cases against Nithyananda and his associates.

He added that two witnesses in the US were facing false lawsuits lodged by the Life Bliss Foundation owned by Swami Nithyananda which included a Rs 100-crore lawsuit against an woman ex-devotee of Nithyananda who had undergone all types of exploitation at the Bidadi ashram. "A victim named in the CID chargesheet was arrested in the US following a false complaint by a devotee of Nithyananda. The same tactic has been adopted by his other devotees in various countries," he said, adding, "A total of 10 cases are filed against me. In four of these cases, the CID has filed a B report. Nithyananda's devotee and actress Ranjitha and Ms Pushpa's complaints that I had tried to rape them also proved false. But Nithyananda has continued his blackmailing tactics of lodging false cases to force witnesses to withdraw and create fear among prospective witnesses who may turn up before the court and depose against him," he alleged.

Mr Lenin also said that Nithyananda was creating roadblocks for the investigation by furnishing false health certificates and other documents. "Many accused in the sex scandal are absconding after getting bail," he charged, denying media reports that the present Tamil Nadu government headed by Ms Jayalalithaa was trying to rescue Nithyananda. "Nithyananda had offered me Rs 20 crore when he came to know that I had the video footage of his sex scandal. But I did not want money. Now since he is creating lots of problems for me, I request social organisations and advocates to come forward and help me fight the case," he said


.
http://www.youtube.com/watch?v=Vd9IeUY3BnQ

Tuesday, July 19, 2011

Lenin lashes out at Nithyananda

Tuesday, Jul 19, 2011

July 18: Mr Lenin Karuppan, the former associate of controversial godman Swami Nithyananda, has alleged that Nithyananda and the other accused in the sex scandal case were lodging false cases against key witnesses of the case to force them to withdraw from the trial. Addressing reporters, Mr Lenin said that of the 12 key witnesses named by the CID, 11 were facing cases against Nithyananda and his associates.

He added that two witnesses in the US were facing false lawsuits lodged by the Life Bliss Foundation owned by Swami Nithyananda which included a Rs 100-crore lawsuit against an woman ex-devotee of Nithyananda who had undergone all types of exploitation at the Bidadi ashram. "A victim named in the CID chargesheet was arrested in the US following a false complaint by a devotee of Nithyananda. The same tactic has been adopted by his other devotees in various countries," he said, adding, "A total of 10 cases are filed against me. In four of these cases, the CID has filed a B report. Nithyananda's devotee and actress Ranjitha and Ms Pushpa's complaints that I had tried to rape them also proved false.
But Nithyananda has continued his blackmailing tactics of lodging false cases to force witnesses to withdraw and create fear among prospective witnesses who may turn up before the court and depose against him," he alleged.

Mr Lenin also said that Nithyananda was creating roadblocks for the investigation by furnishing false health certificates and other documents. "Many accused in the sex scandal are absconding after getting bail," he charged, denying media reports that the present Tamil Nadu government headed by Ms Jayalalithaa was trying to rescue Nithyananda. "Nithyananda had offered me Rs 20 crore when he came to know that I had the video footage of his sex scandal. But
I did not want money. Now since he is creating lots of problems for me, I request social organisations and advocates to come forward and help me fight the case," he said.


Credits: Deccan Chronicle

Complaint Against Nithyanada: Chennai Police Investigating-நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி புகார் : சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது!

சென்னை : நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி புகார் பற்றி சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது. பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க இந்து மதத்தை துணைக்கு அழைப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சியின் புகார் குறித்து விசாரணை நடத்துவதாக ஆணையர் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார். 

Credits: Dinakaran

நித்யானந்தா மீது நடவடிக்கை!

கோவை : கோவையில் நடராஜன் எம்.பி, ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்மிகம் என்ற பெயரில் நித்யானந்தா போன்ற போலி சாமியார்கள் எந்த சட்ட திட்டத்துக்கும் உட்படாமல் இறைவனை சென்றடைய வழி எனக் கூறிக்கொண்டு, போதை உட்கொண்டவர்களை போல ஆண்களையும், பெண்களையும் குதிக்க வைக்கிறார்கள். சாமியாட வைக்கிறார்கள். போலி சாமியார்களை தோலுரித்து காட்டுகின்ற வகையில் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Credits: Dinakaran

அமெரிக்க கோர்ட்டில் நித்தி போலி சாமியார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: லெனின் கருப்பன்



பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய லெனின் கருப்பன்,

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருப்பது போன்ற சிடி மார்பிங் செய்யப்பட்டதாக நித்யானந்தா கூறியுள்ளார். அது உண்மையானது என ஐதராபாத், டெல்லியிலுள்ள தடயவியல் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

நித்யானந்தா தரப்பினர் என்மீது பத்து பொய் வழக்குகள் போட்டுள்ளனர். அவற்றில் 6 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர் நடத்தியுள்ள குண்டலினி யோகா மிகவும் நகைச்சுவையானது. இவ்வாறு மக்களை ஏமாற்றி பல லட்சம் சம்பாதித்து வருகிறார்.

கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி வரும் அவரை இனிமேல் மக்கள் நம்பக் கூடாது. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் அண்ணன் செந்தில், தம்பி நித்தேஸ்வரானந்தா என்ற கோவி மற்றும் பிரம்மானந்தா ஆகியோர் இணைந்து ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பஞ்சலோக சிலைகள், பூஜை பொருட்கள் மதிப்பு குறைவாக கணக்கு காட்டப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள ஆசிரம கிளைக்கு சிலைகள் கொ:ண்டு செல்லப்படுவதாக கூறி கடத்தப்படுகிறது.

அமெரிக்காவிலும் நித்யானந்தாவின் மீது 2 பெண்கள் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளனர். பொப்பட்லால் என்ற தொழிலதிபர் 2.5 பில்லியன் டாலர் நன்கொடையை திரும்பக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல அமெரிக்காவில் இரண்டு இளம் பெண்கள் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அமெரிக்க கோர்ட்டில் நித்யானந்தா போலி சாமியார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்க கோர்ட்டில் நித்தி போலி சாமியார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: லெனின் கருப்பன் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய லெனின் கருப்பன், நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருப்பது போன்ற சிடி மார்பிங் செய்யப்பட்டதாக நித்யானந்தா கூறியுள்ளார். அது உண்மையானது என ஐதராபாத், டெல்லியிலுள்ள தடயவியல் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. நித்யானந்தா தரப்பினர் என்மீது பத்து பொய் வழக்குகள் போட்டுள்ளனர். அவற்றில் 5 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர் நடத்தியுள்ள குண்டலினி யோகா மிகவும் நகைச்சுவையானது. இவ்வாறு மக்களை ஏமாற்றி பல லட்சம் சம்பாதித்து வருகிறார். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி வரும் அவரை இனிமேல் மக்கள் நம்பக் கூடாது. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் அண்ணன் செந்தில், தம்பி நித்தேஸ்வரானந்தா என்ற கோவி மற்றும் பிரம்மானந்தா ஆகியோர் இணைந்து ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பஞ்சலோக சிலைகள், பூஜை பொருட்கள் மதிப்பு குறைவாக கணக்கு காட்டப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள ஆசிரம கிளைக்கு சிலைகள் கொ:ண்டு செல்லப்படுவதாக கூறி கடத்தப்படுகிறது. அமெரிக்காவிலும் நித்யானந்தாவின் மீது 2 பெண்கள் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளனர். பொப்பட்லால் என்ற தொழிலதிபர் 2.5 பில்லியன் டாலர் நன்கொடையை திரும்பக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல அமெரிக்காவில் இரண்டு இளம் பெண்கள் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அமெரிக்க கோர்ட்டில் நித்யானந்தா போலி சாமியார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்க கோர்ட்டில் நித்தி போலி சாமியார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: லெனின் கருப்பன்

http://alagankulam.in/2011071953922/tamilnadu/

Sunday, July 3, 2011

Godman Nithyananda's case stuck as files move between courts

The case against the controversial godman Swami Nithyananda still waits to be committed to trial after the CID filed the chargesheet in November 2010.

The delay is due to case files being shuffled between the Ramanagaram court and the High Court.


A recent application by the special public prosecutor seeking a direction for the medical examination of Nithyananda under section 53 (A) of the CrPC, has been challenged by Nithyananda. The Ramanagaram court is unable to dispose of the application as the case files are in the High Court.


The prosecutor said that the report received from the forensic expert on the video-recording was positive and that the image found in the video was conclusive of the presence of Nithyananda.


Medical examination of the accused in a case of rape is mandatory. When he was arrested, this examination could not be conducted as there was no victim then. Subsequently, a victim from the US approached the CID and gave a statement. Now, the accused has to go through the medical examination,’’ special public prosecutor K. Janardhan said.

Nithyananda challenged the application for his medical examination and moved another application stating it would be breach of privacy.
The Ramanagaram court could not dispose of this application as the files relating to the case are in the High Court.

Moreover, the prosecutor said that the case was yet to be committed to trial as there have been several applications filed before the Ramanagaram CJM court on the chargesheet filed by the CID.


“Accused number 5 in the case (Maa Sachidananda alias Ragini) was denied court permission to travel to the US. But, accused number 2 (Nithya Bhaktananda alias Gopala Seelam Reddy) went to the US and had to return on May 12. He did not return and, through his advocates, moved another application seeking extension. The CID submitted an objection to this in a sealed envelop and stated that the accused were travelling to the US to tamper with the evidence and the only victim who lives there" Mr Janardhan said.


The Ramanagaram court refused to grant the extension sought. The CID stated that the accused who went to the US have lodged several complaints against the victim in an attempt to threaten her.


The CID has examined 101 witnesses spread across the country and even abroad and submitted a 430-page chargesheet against Nithyananda and others.


The CID stated in the chargesheet that during the investigation a woman from the US appeared before the CID and deposed that she was repeatedly raped by Swami Nithyananda not only at his ashram in Bidadi, but in other parts of the country.


The swami allegedly told the victim that if she subjected herself to his sexual demands she would achieve enlightenment and that sex with Swamiji was the path to moksha.


The CID also placed before the court agreements signed between the devotees and ashram authorities taking the consent of the devotees for partaking in tantrik sex.


Source: Deccan Chronicle